أَنَّهُ رَكَعَ دُونَ الصَّفِّ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا، وَلَا تَعُدْ»
20405. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் தொழுகையின் வரிசையில் சேருவதற்கு முன்னே ருகூவு செய்து (பிறகு நடந்து சென்று வரிசையில்) சேர்ந்து கொண்டேன். (தொழுகை முடிந்த பின்பு) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹஸன் பஸரீ (ரஹ்)