🔗

முஸ்னது அஹ்மத்: 20739

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَا يُكْثِرَانِ السَّفَرَ نَحْوَ هَذَا الْبَيْتِ، قَالَا: أَتَيْنَا عَلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْبَادِيَةِ، فَقَالَ الْبَدَوِيُّ: أَخَذَ بِيَدِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يُعَلِّمُنِي مِمَّا عَلَّمَهُ اللَّهُ وَقَالَ: «إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا اتِّقَاءَ اللَّهِ إِلَّا أَعْطَاكَ اللَّهُ خَيْرًا مِنْهُ»


20739. அபூகதாதா (ரஹ்), அபுத்தஹ்மா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

நாங்கள், கஅபா எனும் இந்த ஆலயத்திற்கு (ஹஜ் செய்வதற்கு) அதிகம் பயணம் செய்துள்ளோம். (ஒரு தடவை) நாங்கள் ஒரு கிராமவாசியிடம் சென்றபோது அவர் கூறினார்:

(ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கள், எனது கையைப் பிடித்து அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்ததிலிருந்து எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:

நீ அல்லாஹ்வுக்கு பயந்து எந்த ஒன்றை விட்டாலும் அதைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் உனக்கு வழங்குவான்.