سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ فِي حَجَّةِ الْوَدَاعِ: «إِنَّ هَذَا الدِّينَ لَنْ يَزَالَ ظَاهِرًا عَلَى مَنْ نَاوَأَهُ، لَا يَضُرُّهُ مُخَالِفٌ، وَلَا مُفَارِقٌ، حَتَّى يَمْضِيَ مِنْ أُمَّتِي اثْنَا عَشَرَ خَلِيفَةً» ، قَالَ: ثُمَّ تَكَلَّمَ بِشَيْءٍ لَمْ أَفْهَمْهُ، فَقُلْتُ لِأَبِي: مَا قَالَ؟ قَالَ: «كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ»
20814. ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் செவியேற்றேன்.
நபி (ஸல்) அவர்கள், “இந்த மார்க்கம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வரும் வரை (இஸ்லாத்தின்) எதிரிகளை எதிர்த்து மேலோங்கி இருந்துவரும். (இந்த மார்க்கத்தை பின்பற்றுவோருக்கு) மாறு செய்வோரும், இவர்களை விட்டு பிரிந்து சென்றோரும் மார்க்கத்துக்கு எந்த தீங்கும் செய்துவிடமுடியாது. (இது பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வரை தொடரும்)” என்று கூறினார்கள்.
பிறகு ஏதோ சொன்னார்கள். மக்கள் (பேசிக் கொண்டிருந்ததால்) அது எனக்கு புரியவில்லை. எனவே, நான் என் தந்தையிடம், “நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு என் தந்தை, “அவர்கள் (அதாவது அந்த பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்) அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சொன்னார்கள்.