مَرَرْتُ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ، فَقَالَ: نِعْمَ الْغُلَامُ. فَاتَّبَعَنِي رَجُلٌ مِمَّنْ كَانَ عِنْدَهُ، فَقَالَ: يَا ابْنَ أَخِي، ادْعُ اللَّهَ لِي بِخَيْرٍ. قَالَ: قُلْتُ: وَمَنْ أَنْتَ رَحِمَكَ اللَّهُ؟ قَالَ: أَنَا أَبُو ذَرٍّ، صَاحِبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقُلْتُ: غَفَرَ اللَّهُ لَكَ، أَنْتَ أَحَقُّ أَنْ تَدْعُوَ لِي مِنِّي لَكَ قَالَ: يَا ابْنَ أَخِي، إِنِّي سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ حِينَ مَرَرْتُ بِهِ آنِفًا يَقُولُ: نِعْمَ الْغُلَامُ، وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ وَضَعَ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ يَقُولُ بِهِ»
21457. அய்லா கிளையைச் சேர்ந்தவரான, ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களைக் கடந்து சென்றபோது, அவர்கள் (என்னைப் பற்றி), “எவ்வளவு சிறந்த வாலிபர்!” என்று கூறினார்கள். அப்போது அவர்களுடன் இருந்தவர்களில் ஒருவர் என்னைப் பின்தொடர்ந்து வந்து, “என் சகோதரரின் மகனே! அல்லாஹ்விடம் எனக்காக நல்லதை துஆ செய்யுங்கள்” என்று கூறினார்.
நான், “அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக! நீங்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நான் நபி (ஸல்) அவர்களின் தோழர் அபூதர் (ரலி)” என்று பதிலளித்தார். நான், “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! நான் உங்களுக்கு துஆ செய்வதை விட, நீங்கள்தான் எனக்கு துஆ செய்ய மிகவும் தகுதியானவர்” என்று கூறினேன்.
அப்போது அபூதர் (ரலி) அவர்கள், “என் சகோதரரின் மகனே! நான் சற்றுமுன் நீங்கள் என்னைக் கடந்து சென்றபோது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், ‘எவ்வளவு சிறந்த வாலிபர்!’ என்று கூறியதை நான் கேட்டேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக அல்லாஹ் உண்மையை உமரின் நாவில் வைத்துள்ளான்; அவர் உண்மை பேசுவார்’ என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.