أَنَّهُ لَمَّا رَجَعَ مِنَ الْيَمَنِ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَأَيْتُ رِجَالًا بِالْيَمَنِ يَسْجُدُ بَعْضُهُمْ لِبَعْضٍ، أَفَلَا نَسْجُدُ لَكَ؟ قَالَ: «لَوْ كُنْتُ آمِرًا بَشَرًا يَسْجُدُ لِبَشَرٍ، لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا»
21986. முஆத் (ரலி) அவர்கள் யமனில் இருந்து திரும்ப வந்த போது நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! யமனில் உள்ளவர்களில் சிலர் சிலருக்கு ஸஜ்தா செய்வதை பார்த்தேன். எனவே நாங்கள் உங்களுக்கு ஸஜ்தா செய்யலாமா என்று கேட்டார்கள்,
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தாச் செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்ய அனுமதித்திருப்பேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)