🔗

முஸ்னது அஹ்மத்: 22093

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَمْسٍ مَنْ فَعَلَ مِنْهُنَّ كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ: «مَنْ عَادَ مَرِيضًا، أَوْ خَرَجَ مَعَ جَنَازَةٍ، أَوْ خَرَجَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ، أَوْ دَخَلَ عَلَى إِمَامٍ يُرِيدُ بِذَلِكَ تَعْزِيرَهُ وَتَوْقِيرَهُ، أَوْ قَعَدَ فِي بَيْتِهِ فَيَسْلَمُ النَّاسُ مِنْهُ وَيَسْلَمُ»


22093. ஐந்து செயல்களை செய்பவர் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு வாக்குறுதி அளித்தார்கள்.

1 . நோயாளியை நலம் விசாரிப்பவர்.

2 . ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்பவர்.

3 . அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போருக்கு செல்பவர்.

4 . (முஸ்லிம்) தலைவரைக் கண்ணியப்படுத்தவும், பலப்படுத்தவும் அவரின் ஆதிக்கத்தில் தன்னை ஈடுபடுத்தியவர்.

5 . தனது வீட்டில் அமர்ந்து, அதனால் அவரது பிரச்சனையிலிருந்து மக்களும், மக்களின் பிரச்சனையிலிருந்து அவரும் பாதுகாப்பு பெற்றுக் கொண்டவர்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)