أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا الْإِيمَانُ؟ قَالَ: «إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ، وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ» . قَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا الْإِثْمُ؟ قَالَ: «إِذَا حَاكَ فِي نَفْسِكَ شَيْءٌ فَدَعْهُ»
22166. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம், “ஈமான் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உனது நன்மை உனக்கு மகிழ்ச்சியையும், உனது தீமை உனக்கு வருத்தத்தையும் அளித்தால் நீ முஃமின் (இறை நம்பிக்கையாளர்)” என்று கூறினார்கள்.
அவர், “அல்லாஹ்வின் தூதரே! பாவம் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உனது மனதில் எது உறுத்துகிறதோ (அதுவே பாவமாகும். எனவே) அதை விட்டுவிடு” என்று கூறினார்கள்.