🔗

முஸ்னது அஹ்மத்: 22275

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

لَوْ لَمْ أَسْمَعْهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا سَبْعًا ، قَالَ أَبُو سَعِيدٍ إِلَّا تِسْعًا، مِرَارٍ مَا حَدَّثَتُ بِهِ قَالَ: «إِذَا تَوَضَّأَ الرَّجُلُ كَمَا أُمِرَ ذَهَبَ الْإِثْمُ مِنْ سَمْعِهِ وَبَصَرِهِ وَيَدَيْهِ وَرِجْلَيْهِ»


22275. ஷஹ்ர் பின் ஹவ்ஷப் கூறியதாவது:

“ஒரு மனிதர் தனக்கு ஏவப்பட்ட முறையில் உளூ (அங்கத் தூய்மை) செய்தால் அவர் செய்திருந்த (சிறு) பாவங்கள் அவருடைய செவி, பார்வை , கைகள், கால்கள் போன்றவற்றிலிருந்து வெளியேறிவிடுகின்றன,

என்ற செய்தியை நான், நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஏழு தடவைகள் கேட்காமல் இருந்திருந்தால் இந்த செய்தியை நான் அறிவித்திருக்க மாட்டேன் என அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் அபூஸயீதின் அறிவிப்பில் (ஏழு தடவைகள் என்பதற்கு பதிலாக) ஒன்பது தடவைகள் என்று இடம்பெற்றுள்ளது.