لَوْ لَمْ أَسْمَعْهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا سَبْعَ مِرَارٍ مَا حَدَّثْتُ بِهِ قَالَ: «إِذَا تَوَضَّأَ الرَّجُلُ كَمَا أُمِرَ ذَهَبَ الْإِثْمُ مِنْ سَمْعِهِ وَبَصَرِهِ وَيَدَيْهِ وَرِجْلَيْهِ»
22281. ஷஹ்ர் பின் ஹவ்ஷப் கூறியதாவது:
“ஒரு மனிதர் தனக்கு ஏவப்பட்ட முறையில் உளூ (அங்கத் தூய்மை) செய்தால் அவர் செய்திருந்த (சிறு) பாவங்கள் அவருடைய செவி, பார்வை , கைகள், கால்கள் போன்றவற்றிலிருந்து வெளியேறிவிடுகின்றன,
என்ற செய்தியை நான், நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஏழு தடவைகள் கேட்காமல் இருந்திருந்தால் இந்த செய்தியை நான் அறிவித்திருக்க மாட்டேன் என அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.