«سَيَكُونُ أَجْنَادٌ مُجَنَّدَةٌ شَامٌ وَيَمَنٌ وَعِرَاقٌ، وَاللَّهُ أَعْلَمُ بِأَيِّهَا بَدَأَ، وَعَلَيْكُمْ بِالشَّامِ، أَلَا وَعَلَيْكُمْ بِالشَّامِ، أَلَا وَعَلَيْكُمْ بِالشَّامِ، فَمَنْ كَرِهَ فَعَلَيْهِ بِيَمَنِهِ وَلْيَسْقِ مِنْ غُدُرِهِ؛ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ تَوَكَّلَ لِي بِالشَّامِ وَأَهْلِهِ»
22489. “(முஸ்லிம்கள்) ஆயுதமேந்திய, மாறுபட்ட படையினராக மாறும் நிலை (பிற்காலத்தில்) ஏற்படும். ஒரு படையினர் ஷாமில் இருப்பார்கள். மற்றொரு படையினர் யமன் நாட்டில் இருப்பார்கள். மற்றொரு படையினர் ஈராக்கில் இருப்பார்கள். அவற்றில் எது முதலில் உருவாகும் என்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
நீங்கள் ஷாமுடன் இணைந்துக் கொள்ளுங்கள். அறிந்துக் கொள்ளுங்கள்! நீங்கள் ஷாமுடன் இணைந்துக் கொள்ளுங்கள். அறிந்துக் கொள்ளுங்கள்! நீங்கள் ஷாமுடன் இணைந்துக் கொள்ளுங்கள். அதை வெறுப்பவர் யமன் நாட்டின் படையுடன் சேர்ந்துக் கொள்ளட்டும். உங்களுக்கென்றுள்ள நீர் தடாகத்திலிருந்து தண்ணீர் அருந்துங்கள். (அதாவது மற்ற முஸ்லிம்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே தங்களை தயார் செய்துக் கொள்ளுங்கள்)…
திண்ணமாக அல்லாஹ், எனக்காக ஷாமுக்கும், ஷாம்வாசிகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை ஸுலைமான் பின் ஸுமைர் (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.