🔗

முஸ்னது அஹ்மத்: 22756

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

عَادَ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ قَالَ: فَمَا تَحَوَّزَ لَهُ عَنْ فِرَاشِهِ. فَقَالَ: «أَتَدْرِي مَنْ شُهَدَاءُ أُمَّتِي؟» قَالُوا: قَتْلُ الْمُسْلِمِ شَهَادَةٌ. قَالَ: «إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ قَتْلُ الْمُسْلِمِ شَهَادَةٌ، وَالطَّاعُونُ شَهَادَةٌ، وَالْمَرْأَةُ يَقْتُلُهَا وَلَدُهَا جَمْعَا شَهَادَةٌ»


22756. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (சில நபித்தோழர்களுடன்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களை (அவர்களுக்கு ஏற்பட்ட)ஒரு நோய்க்காக உடல் நலம் விசாரிக்க சென்றார்கள். அவரை படுக்கையிலிருந்து எழு செய்து அமர வைக்கவில்லை.

அப்போது நபி (ஸல்) அவர்கள்அவர்கள், “ஷஹீத்கள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் யார் போருக்குச் சென்று கொல்லப்படுகிறாரோ அவர் தான் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் என் சமுதாயத்தில் உயிர் தியாகிகள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீத் ஆவார். வயிற்றுப் போக்கால் இறந்தவர் ஷஹீத் ஆவார். பிரசவத்தின் போது வயிற்றில் குழந்தை உள்ள நிலையில் மரணிக்கும் பெண்ணும் ஷஹீத் ஆவார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உபாதா பின் ஸாமித் (ரலி)