خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةِ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ وَأَنَا غُلَامٌ مَعَ أَبِي، فَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حُفَيْرَةِ الْقَبْرِ، فَجَعَلَ يُوصِي الْحَافِرَ وَيَقُولُ: «أَوْسِعْ مِنْ قِبَلِ الرَّأْسِ، وَأَوْسِعْ مِنْ قِبَلِ الرِّجْلَيْنِ، لَرُبَّ عَذْقٍ لَهُ فِي الْجَنَّةِ»
23465. நான் சிறுவனாக இருந்தபோது எனது தந்தையுடன் சேர்ந்து நபி (ஸல்) அவர்களுடன் ஒரு அன்ஸாரி மனிதரின் ஜனாஸாவைப் பின் தொடர்ந்தோம். (இறுதியாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ருக் குழிக்கருகில் அமர்ந்துக் கொண்டு, ‘தலைப் பக்கம் விசாலமாக்கு! இருகால்கள் பக்கம் விசாலமாக்கு! என்று குழி வெட்டுபவரிடம் கூறினார்கள். மேலும் (அந்த) ஜனாஸாவிற்கு சொர்க்கத்தில் எவ்வளவு பேரீச்சை மரங்கள் உள்ளன! என்று (ஆச்சரியமாக) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஒரு அன்ஸாரி நபித்தோழர்.