🔗

முஸ்னது அஹ்மத்: 23846

ஹதீஸின் தரம்: Pending

أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ أَفَيُجْزِئُ عَنْهَا أَنْ أُعْتِقَ عَنْهَا؟ قَالَ: «أَعْتِقْ عَنْ أُمِّكَ»


23846. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து “என்னுடைய தாயார் அவர் மீது ஒரு நேர்ச்சை கடமையாக இருந்த நிலையில் (அதை நிறைவேற்றாமல்) இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் அடிமையை உரிமைவிட்டால் அது செல்லுபடியாகுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (ஆம்) அவர் சார்பாக நீ அடிமையை உரிமை விடு! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)