سَمِعَ ابْنَ عُمَرَ، حِينَ مَاتَ رَافِعُ بْنُ خَدِيجٍ: إِنَّ بُكَاءَ الْحَيِّ عَلَى الْمَيِّتِ عَذَابٌ لِلْمَيِّتِ، فَأَتَيْتُ عَمْرَةَ فَذَكَرْتُ ذَلِكَ لَهَا، فَقَالَتْ: قَالَتْ عَائِشَةُ: إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَهُودِيَّةٍ: ” إِنَّكُمْ لَتَبْكُونَ عَلَيْهَا، وَإِنَّهَا لَتُعَذَّبُ، وَقَرَأَتْ: {وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى} [الأنعام: 164]
24115. அபூபக்ர் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் இறந்தபோது, “உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன். இதை நான் அம்ரா பின்த் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் சென்று தெரிவித்தேன்.
அப்போது அவர்கள் இதைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதப் பெண்ணின் விசயத்தில் தான், “நீங்களோ அவளுக்காக அழுகின்றீர்கள்! அவளோ தனது சவக்குழியில் வேதனை செய்யப்படுகிறாள்” என்று கூறினார்கள் என்று கூறிவிட்டு ‘ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது’ (திருக்குர்ஆன் 6:164) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.