«إِنَّ مِنْ يُمْنِ الْمَرْأَةِ تَيْسِيرَ خِطْبَتِهَا، وَتَيْسِيرَ صَدَاقِهَا، وَتَيْسِيرَ رَحِمِهَا»
24478. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் (பரக்கத் எனும்) இறையருளை பெற்றவள் என்பதற்கு அடையாளம், அவளை பெண் பேசுவது எளிதாக இருக்கும். அவளின் (மஹர் எனும்) திருமணக் கொடை(த் தொகை) எளிதாக இருக்கும். அவள் பிள்ளைப்பேறைப் பெறுவதும் எளிதாக இருக்கும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)