🔗

முஸ்னது அஹ்மத்: 24807

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَاوِلِينِي الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ» ، قَالَتْ: قُلْتُ: إِنِّي حَائِضٌ، قَالَ: «إِنَّ حَيْضَكِ لَيْسَ بِيَدِكِ» ،

قَالَ أَبُو أَحْمَدَ: «إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ»


24807. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு, (அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு! என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.

அபூஅஹ்மதின் அறிவிப்பில் சிறிது வார்த்தை மாற்றத்துடன் வந்துள்ளது. (கருத்து ஒன்றே)