«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُجَصَّصَ قَبْرٌ، أَنْ يُبْنَى عَلَيْهِ، أَوْ يُجْلَسَ عَلَيْهِ»
قَالَ أَبِي: لَيْسَ فِيهِ أُمُّ سَلَمَةَ
26556. கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும்; அதன் மீது உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அடிமையான நாஇம் (ரஹ்)
அப்துல்லாஹ் பின் அஹ்மத் அவர்கள் கூறுகிறார்:
எனது தந்தை (இமாம் அஹ்மத் அவர்கள்), இந்த செய்தியில் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறப்படவில்லை என்று கூறினார்.