أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعُودُهُ فِي نِسَاءٍ، فَإِذَا سِقَاءٌ مُعَلَّقٌ نَحْوَهُ يَقْطُرُ مَاؤُهُ عَلَيْهِ مِنْ شِدَّةِ مَا يَجِدُ مِنْ حَرِّ الْحُمَّى، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، لَوْ دَعَوْتَ اللَّهَ فَشَفَاكَ، فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَشَدِّ النَّاسِ بَلَاءً الْأَنْبِيَاءَ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ»
27079. ஃபாத்திமா பின்த் யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு பெண்குழுவினர் (நபி (ஸல்) அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டபோது) அவர்களை நலம் விசாரிக்க சென்றோம். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சலின் வெப்பத்தின் காரணமாக (அதை தணிப்பதற்கு) அவர்களுக்கு நேராக தோலாலான தண்ணீர்ப்பை தொங்க விடப்பட்டிருந்து அதிலிருந்து தண்ணீர் சொட்டுசொட்டாக விழுந்துக் கொண்டிருந்தது.
நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தால் அவன் உங்களுக்கு நிவாரணம் அளிப்பானே! என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் நபிமார்கள்; பிறகு அவர்களை அடுத்துள்ளவர்கள்; பிறகு அவர்களை அடுத்துள்ளவர்கள்; பிறகு அவர்களை அடுத்துள்ளவர்கள்” என்று கூறினார்கள்.