🔗

முஸ்னது அஹ்மத்: 27090

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

أَنَّهَا جَاءَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُحِبُّ الصَّلَاةَ مَعَكَ، قَالَ: «قَدْ عَلِمْتُ أَنَّكِ تُحِبِّينَ الصَّلَاةَ مَعِي، وَصَلَاتُكِ فِي بَيْتِكِ خَيْرٌ لَكِ مِنْ صَلَاتِكِ فِي حُجْرَتِكِ، وَصَلَاتُكِ فِي حُجْرَتِكِ خَيْرٌ مِنْ صَلَاتِكِ فِي دَارِكِ، وَصَلَاتُكِ فِي دَارِكِ خَيْرٌ لَكِ مِنْ صَلَاتِكِ فِي مَسْجِدِ قَوْمِكِ، وَصَلَاتُكِ فِي مَسْجِدِ قَوْمِكِ خَيْرٌ لَكِ مِنْ صَلَاتِكِ فِي مَسْجِدِي» ،

قَالَ: فَأَمَرَتْ فَبُنِيَ لَهَا مَسْجِدٌ فِي أَقْصَى شَيْءٍ مِنْ بَيْتِهَا وَأَظْلَمِهِ، فَكَانَتْ تُصَلِّي فِيهِ حَتَّى لَقِيَتِ اللَّهَ عَزَّ وَجَلَّ


பாடம்:

உம்மு ஹுமைத் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்கள்.

27090. உம்மு ஹுமைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுடன் (ஜமாஅத்தில்) சேர்ந்து தொழ விரும்புகிறேன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ என்னுடன் சேர்ந்து தொழுவதை விரும்புகிறாய் என்பது எனக்குத் தெரியும். (ஆனாலும்) நீ உன் தங்குமிடத்தில் தொழுவது, உன் அறையில் தொழுவதை விடச் சிறந்ததாகும். நீ உன் அறைக்குள் தொழுவது, உன் வீட்டில் தொழுவதை விடச் சிறந்ததாகும். நீ உன் வீட்டிற்குள் தொழுவது, உன் சமூகத்தாரின் பள்ளிவாசலில் தொழுவதை விடச் சிறந்ததாகும். நீ உன் சமூகத்தாரின் பள்ளிவாசலில் தொழுவது, எனது பள்ளிவாசலில் தொழுவதை விடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஸுவைத்? கூறுகிறார்:

இந்தக் கட்டளையைக் கேட்ட அந்தப் பெண்மணி, தனது வீட்டிற்குள் மிகவும் கடைசியான, இருட்டான ஓரிடத்தில் தனக்கென ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு தொழுது வந்தார். அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை (மரணிக்கும் வரை) அவர் அங்கேயே தொழுது வந்தார்.