أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ: «إِنَّهُ سَيَكُونُ بَيْنَكَ وَبَيْنَ عَائِشَةَ أَمْرٌ» ، قَالَ: أَنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «نَعَمْ» ، قَالَ: أَنَا؟ قَالَ: «نَعَمْ» ، قَالَ: فَأَنَا أَشْقَاهُمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «لَا، وَلَكِنْ إِذَا كَانَ ذَلِكَ فَارْدُدْهَا إِلَى مَأْمَنِهَا»
27198. நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை பார்த்து உனக்கும் என்னுடைய மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே ஒரு பெரிய விவகாரம் நடைபெறும் என்றார்கள். அதை கேட்ட அலீ (ரலி) அவர்கள், எனக்கும் ஆயிஷாவுக்குமா சண்டை நடக்க போகிறது? அப்படியானால், என்னைவிட துர்பாக்கியசாலி யாரும் இருக்க முடியாது என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை. அப்படி நடந்தால் ஆயிஷாவை பாதுகாப்பான இடத்திற்கு நீர் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூராஃபிஉ (ரஹ்)