🔗

முஸ்னது அஹ்மத்: 2730

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِقَصْعَةٍ مِنْ ثَرِيدٍ، فَقَالَ: «كُلُوا مِنْ حَوْلِهَا، وَلا تَأْكُلُوا مِنْ وَسَطِهَا، فَإِنَّ الْبَرَكَةَ تَنْزِلُ فِي وَسَطِهَا»


2730. நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் சபையில்) “ஸரீத்” (தக்கடி) எனும் உணவு, தட்டில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அப்போது அவர்கள், உணவுத் தட்டின் ஓரத்திலிருந்து (எடுத்து) உண்ணுங்கள். அதன் நடுவிலிருந்து (எடுத்து) உண்ணாதீர்கள். ஏனெனில் (நாம் உண்ணும்)  உணவுத் தட்டின் நடுவில்தான் பரக்கத் இறங்குகிறது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)