🔗

முஸ்னது அஹ்மத்: 3420

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ فَأَقْضِيهِ عَنْهَا قَالَ: «أَرَأَيْتَكِ لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ، كُنْتِ تَقْضِينَهُ؟» قَالَتْ: نَعَمْ قَالَ: «فَدَيْنُ اللَّهِ عَزَّ وَجَلَّ أَحَقُّ أَنْ يُقْضَى»


3420. ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், உன் தாயார் மீது கடன் இருந்து அவர் சார்பாக நீர் அதை நிறைவேற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்! என்றார். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)