«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَفْقَتَيْنِ فِي صَفْقَةٍ وَاحِدَةٍ»
قَالَ أَسْوَدُ: قَالَ شَرِيكٌ: قَالَ سِمَاكٌ: ” الرَّجُلُ يَبِيعُ الْبَيْعَ، فَيَقُولُ: هُوَ بِنَسَاءٍ بِكَذَا وَكَذَا، وَهُوَ بِنَقْدٍ بِكَذَا وَكَذَا “
3783. ஒரு வியாபாரத்தை இரண்டு வியாபாரமாக (அதாவது உடனடி விற்பனைக்கு ஒரு விலையும், தவணை முறை விற்பனைக்கு வேறு ஒரு கூடுதலான விலையும் வைத்து வியாபாரம்) செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸிமாக் அவர்கள், “ஒரு வியாபாரத்தை இரண்டு வியாபாரமாக செய்வது” என்றால் என்ன என்பது பற்றி விளக்கமளிக்கையில், “ஒருவர் ஒரு பொருளை விற்கும் போது தவணைமுறையில் வாங்கினால் இன்ன விலையும்; உடனடி விலைக்கு வாங்கினால் இன்ன விலையும் என்று கூறி விற்பதாகும்” என்று கூறினார்கள்.