🔗

முஸ்னது அஹ்மத்: 3895

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«كَانَ فِي الرَّكْعَتَيْنِ الْأُوَلَتَيْنِ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ» ، قُلْتُ: حَتَّى يَقُومَ؟ قَالَ: حَتَّى يَقُومَ


3895. நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின்) முதலிரண்டு ரக்அத்களின் முடிவில் சூடான கல்மீது அமர்ந்திருப்பதைப் போன்று (சிறிது நேரமே அத்தஹிய்யாத்தில்) அமர்ந்திருப்பார்கள் என்று (எனது தந்தை) அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான், நபி (ஸல்) அவர்கள் நிலைக்கு எழும்வரை இவ்வாறு தானா? என்று கேட்டேன். அதற்கவர்கள், “ஆம் இவ்வாறு தான் இருப்பார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஉபைதா-ஆமிர் பின் அப்துல்லாஹ் (ரஹ்).