لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَعُ هَؤُلَاءِ الدَّعَوَاتِ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي» ، قَالَ: يَعْنِي الْخَسْفَ
4785. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலை, மாலை வேளைகளில் இந்த துஆக்களை ஓதுவதை விடுவதே இல்லை:
“அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஆஃபியத ஃபித்துன்யா வல்ஆகிரஹ். அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் அஃப்வ வல்ஆஃபியத ஃபீ தீனீ, வ துன்யாய, வ அஹ்லீ, வ மாலீ. அல்லாஹும்மஸ்துர் அவ்ராதீ, வ ஆமின் ரவ்ஆதீ, அல்லாஹும்மஹ்ஃபள்னீ மிம் பைனி யதைய்ய, வ மின் கல்ஃபீ, வ அன் யமீனீ, வ அன் ஷிமாலீ, வ மின் ஃபவ்கீ. வ அஊது பிஅளமதிக அன் உஃக்தால மின் தஹ்தீ.
(பொருள்: “அல்லாஹ்வே! இம்மையிலும் மறுமையிலும் உன்னிடம் நான் மன்னிப்பையும் நல்வாழ்வையும் கேட்கிறேன். அல்லாஹ்வே! எனது மார்க்கத்திலும், எனது உலக வாழ்விலும், எனது குடும்பத்திலும், எனது செல்வத்திலும் உன்னிடம் மன்னிப்பையும் நல்வாழ்வையும் கேட்கிறேன். அல்லாஹ்வே! எனது குறைகளை மறைப்பாயாக! எனது அச்சங்களைப் போக்கி எனக்கு அமைதி அளிப்பாயாக! அல்லாஹ்வே! எனக்கு முன்னாலிருந்தும், எனக்குப் பின்னாலிருந்தும், எனது வலப்புறத்திலிருந்தும், எனது இடப்புறத்திலிருந்தும், எனக்கு மேலிருந்தும் என்னை நீ பாதுகாப்பாயாக! நான் எனக்குக் கீழிருந்து வஞ்சிக்கப்படுவதை விட்டும் உனது மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
இதன் அறிவிப்பாளர் (வகீஃ அவர்கள்) கூறுகையில்: “எனக்குக் கீழிருந்து வஞ்சிக்கப்படுவது என்பது பூமி பிளந்து உள்வாங்குவதைக் குறிக்கும்” என்று விளக்கமளித்துள்ளார்.