🔗

முஸ்னது அஹ்மத்: 4787

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لُعِنَتِ الْخَمْرُ عَلَى عَشْرَةِ وُجُوهٍ: لُعِنَتِ الْخَمْرُ بِعَيْنِهَا، وَشَارِبُهَا، وَسَاقِيهَا، وَبَائِعُهَا، وَمُبْتَاعُهَا، وَعَاصِرُهَا، وَمُعْتَصِرُهَا، وَحَامِلُهَا، وَالْمَحْمُولَةُ إِلَيْهِ، وَآكِلُ ثَمَنِهَا


4787. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதுவுடன் சம்பந்தப்படும் பத்து வகையினர் சபிக்கப்படுகின்றனர்.

  1. மது பானத்தையும்
  2. அதைப் பருகுபவரையும்
  3. பிறருக்கு பருகக் கொடுப்பவரையும்
  4. அதை விற்பவரையும்
  5. அதை வாங்குபவரையும்
  6. அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும்
  7. (தானே) தயார் செய்து கொள்பவரையும்
  8. அதைச் சுமந்து செல்பவரையும்
  9. யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும்
  10. அதன் கிரயத்தை உண்பவரையும் (அல்லாஹ் சபிக்கிறான்.)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி).