«الْمُؤْمِنُ الَّذِي يُخَالِطُ النَّاسَ، وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ، أَعْظَمُ أَجْرًا مِنَ الَّذِي لَا يُخَالِطُهُمْ، وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ»
قَالَ: حَجَّاجٌ: «خَيْرٌ مِنَ الَّذِي لَا يُخَالِطُهُمْ»
5022. “மக்களைச் சந்திக்காமலும் அவர்களிடமிருந்து ஏற்படும் தீங்குகளைச் சகித்துக் கொள்ள முடியாமலும் இருக்கின்ற ஒரு முஸ்லிமை விட, மக்களோடு வாழ்ந்து அவர்களிடமிருந்து வரும் தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் (அல்லாஹ்விடம்) மகத்தான நற்கூலியை பெறுபவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
ஷுஅபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் ஜஃபர் அவர்கள் இவ்வாறு ஹதீஸின் வாசகத்தை அறிவித்துள்ளார்.
ஷுஅபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹஜ்ஜாஜ் பின் முஹம்மத் அவர்கள், “தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் சிறந்தவர் ஆவார்” என்று அறிவித்துள்ளார்.
இதில் நபித்தோழர்களில் ஒருபெரியவர் என்று குறிப்பிடப்படுபவர் இப்னு உமர் (ரலி) ஆவார் என்று ஸுலைமான் (பின் மிஹ்ரான்-அல்அஃமஷ்) அவர்கள் கூறினார்கள் என ஷுஅபா அவர்கள் குறிப்பிட்டார்.