🔗

முஸ்னது அஹ்மத்: 5123

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَرِضَ ابْنُ عَامِرٍ فَجَعَلُوا يَثْنُونَ عَلَيْهِ، وَابْنُ عُمَرَ سَاكِتٌ فَقَالَ: أَمَا إِنِّي لَسْتُ بِأَغَشِّهِمْ لَكَ، وَلَكِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ»


5123. முஸ்அப் பின் ஸஃத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் மற்றவர்களும் சென்றனர்) அவர்களில் சிலர் இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களைப் புகழ்ந்தனர். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அமைதியாக இருந்தார்கள்.

பிறகு அவர்கள், “நான் அவர்களைப் போன்று உம்மை ஏமாற்ற விரும்பவில்லை. ஏனெனில், “அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் தொழும் எந்தத் தொழுகையையும்; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மத்தையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். (நீங்கள் பஸ்ராவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ல் இருந்தீர்கள்)