نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقَزَعِ
قُلْتُ: وَمَا الْقَزَعُ، قَالَ: أَنْ يُحْلَقَ رَأْسُ الصَّبِيِّ وَيُتْرَكَ بَعْضُهُ
5175. நபி (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) வைத்துக் கொள்ளக் கூடாதெனத் தடை செய்தார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) கூறினார்:
நான், இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ‘கஸஉ’ என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஒருவர் சிறுவனின் தலை முடியை மழிக்கும்போது (சிறிது மழித்து விட்டு), இங்கு அங்குமாக (சிற்சில இடங்களில் மட்டும்) முடியை (மழிக்காமல்) அப்படியே விட்டுவிடுவதாகும்’ என்று கூறினார்கள்.