🔗

முஸ்னது அஹ்மத்: 6825

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

مَا أَحَدٌ مِنَ الْمُسْلِمِينَ يُبْتَلَى بِبَلَاءٍ فِي جَسَدِهِ، إِلَّا أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْحَفَظَةَ الَّذِينَ يَحْفَظُونَهُ: اكْتُبُوا لِعَبْدِي مِثْلَ مَا كَانَ يَعْمَلُ وَهُوَ صَحِيحٌ، مَا دَامَ مَحْبُوسًا فِي وَثَاقِي “

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ: قَالَ أَبِي وَقَالَ إِسْحَاقُ: «اكْتُبُوا لِعَبْدِي فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ»


6825. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களில் யாராவது தனது உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதின் மூலம் சோதிக்கப்பட்டால், வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ், பாதுகாப்பு வானவர்களுக்கு கட்டளையிடுகிறான்:

எனது அடியான் ஆரோக்கியமானவனாய் இருக்கும்போது செய்த நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே நற்பலனை அவன் நோயாளியாக இருக்கின்ற  இந்த நேரத்திலும் (அவன் பாவம் எதுவும் செய்யாமல்) என்னுடன் தொடர்பில் இருக்கும்வரை அவனுக்கு எழுதுங்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)