«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَتْفِ الشَّيْبِ» ،
وَقَالَ: «هُوَ نُورُ الْمُؤْمِنِ» ،
وَقَالَ: «مَا شَابَ رَجُلٌ فِي الْإِسْلَامِ شَيْبَةً، إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَمُحِيَتْ عَنْهُ بِهَا سَيِّئَةٌ، وَكُتِبَتْ لَهُ بِهَا حَسَنَةٌ»
وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا»
6937. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நரைத்த முடியை நீக்குவதை தடை செய்தார்கள்.
மேலும் அவர்கள், “அது முஸ்லிமுக்கு ஒளியாகும்” என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள், “இஸ்லாத்தில் இருக்கும் போது எந்த ஒரு மனிதரின் முடி நரைத்து விட்டாலும் அதற்காக அவருக்கு ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது; அவரை விட்டு ஒரு பாவம் அழிக்கப்படுகிறது; ஒரு நன்மை எழுதப்படுகிறது.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)