🔗

முஸ்னது அஹ்மத்: 7631

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَخَذَتِ النَّاسَ رِيحٌ بِطَرِيقِ مَكَّةَ، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ حَاجٌّ، فَاشْتَدَّتْ عَلَيْهِمْ، فَقَالَ عُمَرُ لِمَنْ حَوْلَهُ: مَنْ يُحَدِّثُنَا عَنِ الرِّيحِ؟ فَلَمْ يُرْجِعُوا إِلَيْهِ شَيْئًا، فَبَلَغَنِي الَّذِي سَأَلَ عَنْهُ عُمَرُ مِنْ ذَلِكَ، فَاسْتَحْثَثْتُ رَاحِلَتِي حَتَّى أَدْرَكْتُهُ، فَقُلْتُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أُخْبِرْتُ أَنَّكَ سَأَلْتَ عَنِ الرِّيحِ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ، تَأْتِي بِالرَّحْمَةِ، وَتَأْتِي بِالْعَذَابِ فَإِذَا رَأَيْتُمُوهَا، فَلَا تَسُبُّوهَا، وَسَلُوا اللَّهَ خَيْرَهَا، وَاسْتَعِيذُوا بِهِ مِنْ شَرِّهَا»


7631. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் மக்காவிற்குச் செல்லும் வழியில் இருந்தபோது, கடும் காற்று அவர்களைத் தாக்கியது. அப்போது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், ஹஜ் செய்துக் கொண்டிருந்தார்கள். காற்று மிகக் கடுமையாக வீசியதால், தம்மைச் சுற்றியிருந்தவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், “காற்றைப் பற்றி நமக்கு யார் அறிவிக்கிறார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் எந்தப் பதிலையும் கூறவில்லை.

அப்போது, உமர் (ரலி) அவர்கள் காற்றைப் பற்றிக் கேட்ட தகவல் எனக்கு எட்டியது. நான் எனது ஒட்டகத்தை விரைவாகச் செலுத்திக்கொண்டு, அவர்களை அடைந்து கூறினேன்: இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் காற்றைப் பற்றிக் கேட்டதாக எனக்குச் சொல்லப்பட்டது. இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காற்று என்பது அல்லாஹ்வின் கருணைக்குரிய விஷயங்களில் ஒன்றாகும். அது நன்மையைக் கொண்டும் வரும்; (அல்லது) வேதனையைக் கொண்டும் வரும். நீங்கள் அதனைக் கண்டால், திட்டாதீர்கள். அல்லாஹ்விடம் அதன் நன்மையைக் கேளுங்கள். அதன் தீங்கைவிட்டு அவனிடம் பாதுகாப்புத் தேடுங்கள்.