🔗

முஸ்னது அஹ்மத்: 7759

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«تُسْتَأْمَرُ الثَّيِّبُ، وَتُسْتَأْذَنُ الْبِكْرُ» قَالُوا: وَمَا إِذْنُهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تَسْكُتُ»


7759. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிகழிந்த பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஆலோசித்து) அனுமதி பெற வேண்டும்; கன்னிப் பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும்” என்று கூறினார்கள்.

அப்போது மக்கள், அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)