🔗

முஸ்னது அஹ்மத்: 8043

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

يَا رَسُولَ اللَّهِ، إِنَّا إِذَا رَأَيْنَاكَ رَقَّتْ قُلُوبُنَا وَكُنَّا مِنْ أَهْلِ الْآخِرَةِ، وَإِذَا فَارَقْنَاكَ أَعْجَبَتْنَا الدُّنْيَا، وَشَمَمْنَا النِّسَاءَ وَالْأَوْلَادَ قَالَ: ” لَوْ تَكُونُونَ – أَوْ قَالَ: لَوْ أَنَّكُمْ تَكُونُونَ – عَلَى كُلِّ حَالٍ عَلَى الْحَالِ الَّتِي أَنْتُمْ عَلَيْهَا عِنْدِي، لَصَافَحَتْكُمُ الْمَلَائِكَةُ بِأَكُفِّهِمْ، وَلَزَارَتْكُمْ فِي بُيُوتِكُمْ، وَلَوْ لَمْ تُذْنِبُوا، لَجَاءَ اللَّهُ بِقَوْمٍ يُذْنِبُونَ كَيْ يَغْفِرَ لَهُمْ

قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، حَدِّثْنَا عَنِ الْجَنَّةِ، مَا بِنَاؤُهَا؟ قَالَ: «لَبِنَةُ ذَهَبٍ وَلَبِنَةُ فِضَّةٍ، وَمِلَاطُهَا الْمِسْكُ الْأَذْفَرُ، وَحَصْبَاؤُهَا اللُّؤْلُؤُ وَالْيَاقُوتُ، وَتُرَابُهَا الزَّعْفَرَانُ، مَنْ يَدْخُلُهَا يَنْعَمُ وَلَا يَبْأَسُ، وَيَخْلُدُ وَلَا يَمُوتُ، لَا تَبْلَى ثِيَابُهُ وَلَا يَفْنَى شَبَابُهُ»

ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ: الْإِمَامُ الْعَادِلُ، وَالصَّائِمُ حَتَّى يُفْطِرَ، وَدَعْوَةُ الْمَظْلُومِ تُحْمَلُ عَلَى الْغَمَامِ، وَتُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاوَاتِ، وَيَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ: وَعِزَّتِي لَأَنْصُرَنَّكَ وَلَوْ بَعْدَ حِينٍ


8043. நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்,
“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களிடம் இருக்கும்போது எங்கள் இதயங்கள் மிருதுவாகி, உலகத்தை வெறுத்து, மறுமையின் மக்களைப் போலாகிவிடுகிறோம். ஆனால், உங்களிடமிருந்து வெளியேறி எங்கள் குடும்பத்தாருடன் கலந்து, எங்கள் குழந்தைகளை நெருங்கும்போது, எங்களை நாங்களே மாறுபட்டவர்களாக உணர்கிறோம்” என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
“நீங்கள் என்னிடமிருந்து வெளியேறிய பின்பும் அந்த நிலையிலேயே இருந்தால், உங்கள் வீடுகளில் வானவர்கள் வந்து உங்களைச் சந்திப்பார்கள். மேலும், நீங்கள் பாவம் செய்யாவிட்டால், அல்லாஹ் புதிய மனிதர்களைப் படைத்து, அவர்கள் பாவம் செய்து, பின்னர் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவான்” என்று கூறினார்கள்.


நான் அல்லாஹ்வின் தூதரிடம், “அல்லாஹ்வின் தூதரே! படைப்புகள் எதிலிருந்து படைக்கப்பட்டன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீரிலிருந்து” என்று பதிலளித்தார்கள். நான், “சொர்க்கத்தின் கட்டமைப்பு என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒரு செங்கல் வெள்ளியால் ஆனது, மற்றொரு செங்கல் தங்கத்தால் ஆனது. அவற்றின் பூச்சு நறுமணம் வீசும் கஸ்தூரி. அவற்றின் கூழாங்கற்கள் முத்துக்கள் மற்றும் மாணிக்கங்கள். அவற்றின் மண் குங்குமப்பூ. அதில் நுழைந்தவர் பாக்கியம் பெறுவார்; துர்பாக்கியம் அடைய மாட்டார். அவர் நிரந்தரமாக இருப்பார்; இறக்க மாட்டார். அவர்களின் ஆடைகள் பழுதடையாது; அவர்களின் இளமை அழிந்து போகாது” என்று கூறினார்கள்.


மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேரின் பிரார்த்தனைகள் மறுக்கப்படாதவைகளாகும்.

1 . நீதமான அரசனின் பிரார்த்தனை.

2 . நோன்பாளி (நோன்புத் துறக்கும் வரை உள்ள நேரங்களில்) செய்யும் பிரார்த்தனை.

3 . அநீதமிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை.

அநீதிக்கு உள்ளானவரின் பிரார்த்தனை மேகங்களுக்கு மேலே உயர்த்தப்படுகிறது. அதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. மேலும், மகத்துவமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்: என் மாண்பின் மீதாணையாக! உனக்கு நிச்சயமாக உதவி செய்வேன்; அது சிறிது காலம் தாமதித்தாலும் கூட!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)