🔗

முஸ்னது அஹ்மத்: 8361

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَكْثَرَ مَا يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ، فَقِيلَ لَهُ، فَقَالَ: ” إِنَّ الْأَعْمَالَ تُعْرَضُ كُلَّ اثْنَيْنِ وَخَمِيسٍ – أَوْ: كُلَّ يَوْمِ اثْنَيْنِ وَخَمِيسٍ – فَيَغْفِرُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِكُلِّ مُسْلِمٍ – أَوْ: لِكُلِّ مُؤْمِنٍ – إِلَّا الْمُتَهَاجِرَيْنِ، فَيَقُولُ: أَخِّرْهُمَا


8361. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள் மற்றும், வியாழக்கிழமைகளில் அதிகமாக நோன்பு வைப்பார்கள். இதுப்பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும்  (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அல்லது ஒவ்வொரு முஃமினுக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்; தமக்கிடையே பகைமை உள்ள இரு மனிதர்களைத் தவிர!

(இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும்வரை) இவர்களுக்கு (மன்னிப்பை)  தாமதப்படுத்துங்கள் என்று அல்லாஹ் (வானவர்களிடம்)  கூறுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)