مَنْ قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ كَانَتْ لَهُ دَوَاءً مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً أَيْسَرُهَا الْهَمُّ
541. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“லாஹவ்ல வலா ஃகுவ்வத்த இல்லா பில்லாஹ்”
(பொருள்: அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது)
என்று ஒருவர் கூறினால் அது அவருக்கு தொண்ணூற்று ஒன்பது வகையான நோய்களுக்கு மருந்தாகும். அவற்றில் மிகவும் சிறியது கவலை எனும் நோயாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)