🔗

முஅத்தா மாலிக்: 100

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

دَخَلْتُ عَلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ فَتَذَاكَرْنَا مَا يَكُونُ مِنْهُ الْوُضُوءُ، فَقَالَ مَرْوَانُ وَمِنْ مَسِّ الذَّكَرِ الْوُضُوءُ، فَقَالَ عُرْوَةُ مَا عَلِمْتُ هَذَا، فَقَالَ مَرْوَانُ بْنُ الْحَكَمِ، أَخْبَرَتْنِي بُسْرَةُ بِنْتُ صَفْوَانَ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا مَسَّ أَحَدُكُمْ ذَكَرَهُ فَلْيَتَوَضَّأْ»


பாடம் 23

மறைவுறுப்பைத் தொடுவதால் ஒளு?

100. நான் மர்வான் இப்னு ஹகம் அவர்களிடம்சென்றேன். அப்போது எதனால் ஒளு நீங்கும்? எனப் பேசிக் கொண்டிருந்தோம். மறைவுறுப்பை தொடுவதினால் ஒளுச் செய்தல் வேண்டும் என் மர்வான் கூறினார். இது எனக்குத் தொரியாது என நான் கூறினேன். அப்போது மர்வான் அவர்கள், ”ஒருவர் தன் மறைவுறுப்பைத் தொட்டால் அவர் ஒளுச் செய்யட்டும்”” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என புஸ்ரா பின்த் ஸப்வான் (ரலி அவர்கள் தனக்குக் கூறியதாக கூறினார்கள். இதை உர்வா இப்னுஸ் ஸுபைர் அறிவிக்கின்றார்கள்.

(இது திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான் ல் உள்ளது).