أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ، بَدَأَ «بِغَسْلِ يَدَيْهِ، ثُمَّ تَوَضَّأَ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلَاةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي الْمَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ، ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلَاثَ غَرَفَاتٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفِيضُ الْمَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ»
பாடம் 25
குளிப்பு முறை
109. நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பைக் குளிக்கும் போது தன் கைகளை கழுவ ஆரம்பிப்பார்கள். பின்பு தொழுகைக்காக ஒளுச் செய்வது போல் ஒளுச் செய்வார்கள். பின்பு தன் விரல்களை தண்ணீருக்குள் நுழைத்து அவைகளை தன் (தலை) முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்பு தன் தலை மீது கைகளால் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றுவார்கள். பின்பு தன் உடல் முழுவதும் தண்ணீரை (ஊற்றி) ஓட விடுவார்கள் என அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ, நஸயீ யில் உள்ளது).