🔗

முஅத்தா மாலிக்: 1292

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ بَعَثَ جُيُوشًا إِلَى الشَّامِ، فَخَرَجَ يَمْشِي مَعَ يَزِيدَ بْنِ أَبِي سُفْيَانَ، وَكَانَ أَمِيرَ رُبْعٍ مِنْ تِلْكَ الأَرْبَاعِ، فَزَعَمُوا أَنَّ يَزِيدَ قَالَ لأَبِي بَكْرٍ: إِمَّا أَنْ تَرْكَبَ، وَإِمَّا أَنْ أَنْزِلَ، فَقَالَ أَبُو بَكْرٍ: مَا أَنْتَ بِنَازِلٍ، وَمَا أَنَا بِرَاكِبٍ، إِنِّي أَحْتَسِبُ خُطَايَ هَذِهِ فِي سَبِيلِ اللهِ، ثُمَّ قَالَ لَهُ: إِنَّكَ سَتَجِدُ قَوْمًا زَعَمُوا أَنَّهُمْ حَبَّسُوا أَنْفُسَهُمْ لِلَّهِ، فَذَرْهُمْ وَمَا زَعَمُوا أَنَّهُمْ حَبَّسُوا أَنْفُسَهُمْ لَهُ، وَسَتَجِدُ قَوْمًا فَحَصُوا عَن أَوْسَاطِ رُؤُوسِهِمْ مِنَ الشَّعَرِ، فَاضْرِبْ مَا فَحَصُوا عَنهُ بِالسَّيْفِ، وَإِنِّي مُوصِيكَ بِعَشْرٍ: لاَ تَقْتُلَنَّ امْرَأَةً، وَلاَ صَبِيًّا، وَلاَ كَبِيرًا هَرِمًا، وَلاَ تَقْطَعَنَّ شَجَرًا مُثْمِرًا، وَلاَ تُخَرِّبَنَّ عَامِرًا، وَلاَ تَعْقِرَنَّ شَاةً، وَلاَ بَعِيرًا، إِلاَّ لِمَأْكَلَةٍ، وَلاَ تَحْرِقَنَّ نَحْلاً، وَلاَ تُغَرِّقَنَّهُ، وَلاَ تَغْلُلْ، وَلاَ تَجْبُنْ.


1292. யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நோக்கிப் படைகளை அனுப்பி வைத்தபோது, யஸீத் பின் அபூஸுஃப்யான் அவர்களுடன் நடந்து சென்றார்கள். யஸீத் (ரலி) அவர்கள் அந்தப் படைகளின் ஒரு பகுதிக்குத் தலைவராக இருந்தார்கள்.

அப்பொழுது யஸீத் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “ஒன்று நீங்கள் சவாரி செய்யுங்கள், இல்லையேல் நான் (சவாரியிலிருந்து) இறங்கிக் கொள்கிறேன்” என்று சொன்னார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “நீர் இறங்க வேண்டியதில்லை, நானும் சவாரி செய்யப் போவதில்லை. ஏனெனில், அல்லாஹ்வின் பாதையில் நான் எடுத்து வைக்கும் இந்த அடிகள் மூலம் நற்கூலியை நாடி நான் நடக்கிறேன்” என்று கூறினார்கள்.

பின்னர் (அபூபக்ர்-ரலி அவர்கள்) யஸீத் (ரலி) அவர்களிடம், “நீங்கள் சில கூட்டத்தாரைச் சந்திப்பீர்கள். அவர்கள் தங்களை அல்லாஹ்வுக்காகவே (வணக்கத்தில்) ஈடுபடுத்திக் கொண்டதாகக் கூறுகிறார்கள். அவர்கள் தங்களை எதற்காக ஈடுபடுத்திக் கொண்டதாகக் கருதுகிறார்களோ, அதற்காக அவர்களை விட்டுவிடுங்கள்.

மேலும், சில கூட்டத்தாரைச் சந்திப்பீர்கள். அவர்கள் தங்கள் தலையின் நடுப்பகுதியிலுள்ள முடிகளைச் சுத்தமாக நீக்கியிருப்பார்கள். அவர்கள் நீக்கிய அந்தப் பகுதியை வாளால் வெட்டுங்கள். (அதாவது, அவர்களை எதிர்த்துப் போரிடுங்கள்).

மேலும், நான் உங்களுக்குப் பத்து விஷயங்களைப் பற்றி உபதேசம் செய்கிறேன். அவைகள்:

1 . “(போரில்) பெண்களைக் கொல்லாதீர்கள்.
2 . சிறுவர்களைக் கொல்லாதீர்கள்.
3 . முதியவர்களைக் கொல்லாதீர்கள்.
4 . பயன் தரும் மரங்களை வெட்டாதீர்கள்.
5 . வளமாக உள்ள எதையும் அழிக்காதீர்கள்.
6 . உண்பதற்காக அன்றி ஆடு, ஒட்டகம் ஆகியவற்றை அறுக்காதீர்கள்.
7 . பேரீச்ச மரங்களை எரிக்காதீர்கள்.
8 . நீரால் மூழ்கடிக்கவும் செய்யாதீர்கள்.
9 . மோசடி செய்யாதீர்கள்.
10 . அற்பக் கோழையாகி விடாதீர்கள்” என்று கூறினார்கள்.