قَالَ يَحيَى: قَالَ مَالِكٌ: مَنْ قَامَ إِلَى الصَّلاَةِ فَلَمْ يَجِدْ مَاءً، فَعَمِلَ بِمَا أَمَرَهُ اللهُ بِهِ مِنَ التَّيَمُّمِ، فَقَدْ أَطَاعَ اللهَ، وَلَيْسَ الَّذِي وَجَدَ الْمَاءَ بِأَطْهَرَ مِنْهُ، وَلاَ أَتَمَّ صَلاَةً، لأَنَّهُمَا أُمِرَا جَمِيعًا، فَكُلٌّ عَمِلَ بِمَا أَمَرَهُ اللهُ بِهِ، وَإِنَّمَا الْعَمَلُ بِمَا أَمَرَ اللهُ بِهِ مِنَ الْوُضُوءِ لِمَنْ وَجَدَ الْمَاءَ، وَالتَّيَمُّمِ لِمَنْ لَمْ يَجِدِ الْمَاءَ، قَبْلَ أَنْ يَدْخُلَ فِي الصَّلاَةِ.
138. ஒருவர் தொழுகைக்காக தயாராகி தண்ணீர் கிடைக்கவில்லை. அது சமயம் தயம்மும் செய்தல் என்ற அல்லாஹ்வின் சட்டத்தைச் செய்தால் அவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு விட்டார். தண்ணீர் பெற்றவன் தயம்மும் செய்தவனை விட அதிகத் தூய்மை ஆனவன் என்பதும், பூரணமான தொழுகையுடையவன் என்பதுமில்லை. ஏனெனில், இரு காரியங்களும் இறைவனால் உத்தரவிடப்பட்டவையே! ஒவ்வொரு அமல்களும் அல்லாஹ்வின் கட்டளையின் படியே உள்ளதாகும். தண்ணீர் கிடைத்தால் ஒளுச் செய்வது என்பதும், தொழ ஆரம்பிக்கு முன் தண்ணீர் கிடைக்கவில்லையானால் தயம்மும் செய்வது என்பதும் அல்லாஹ் ஏவிய கடமைகள் தான் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.