🔗

முஅத்தா மாலிக்: 1396

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كُنَّا نُضَحِّي بِالشَّاةِ الْوَاحِدَةِ يَذْبَحُهَا الرَّجُلُ عَنهُ، وَعَن أَهْلِ بَيْتِهِ، ثُمَّ تَبَاهَى النَّاسُ بَعْدُ، فَصَارَتْ مُبَاهَاةً.


1396. அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில்) ஒரு ஆட்டையே குர்பானி கொடுத்து வந்தோம். ஒருவர் தன் சார்பாகவும், தன் குடும்பத்தார் சார்பாகவும் அதை அறுப்பார். அதன் பிறகு மக்கள் (அதிகமான எண்ணிக்கையில் குர்பானி கொடுத்து) பெருமையடிக்கத் தொடங்கினர். அதுவே (இப்போது) பெருமையடிக்கும் செயலாக மாறிவிட்டது.

அறிவிப்பவர்: அதாஉ பின் யஸார் (ரஹ்)