وَسُئِلَ مَالِكٌ كَيْفَ التَّيَمُّمُ وَأَيْنَ يَبْلُغُ بِهِ؟ فَقَالَ: يَضْرِبُ ضَرْبَةً لِلْوَجْهِ، وَضَرْبَةً لِلْيَدَيْنِ، وَيَمْسَحُهُمَا إِلَى الْمِرْفَقَيْنِ.
142. தயம்மும் செய்வது எப்படி? அதை எதில் செய்வது? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”தன் முகத்துக்காக ஒரு முறையும், கைகளுக்காக ஒரு முறையும் (மண்ணில்) அடித்து முழங்கை உட்பட அவ்விரண்டையும் மஸஹு செய்வது என பதில் கூறினார்கள்.