«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ»
173. பாங்கை நீங்கள் கேட்டால், பாங்கு கூறுபவர் கூறுவது போல் நீங்களும் கூறுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).