🔗

முஅத்தா மாலிக்: 174

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لَاسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا»


174. பாங்கிலும், முதல் வாரிசையிலும் உள்ளதை (அதன் சிறப்பை) மக்கள் விளங்கி, அதை குலுக்கல் முறையிலே தவிர அடைய முடியாது என்று அவர்கள் அறிந்தால் குலுக்கல் போட்டுக் கொள்வார்கள். பகல் நேரத் தொழுகையில் உள்ளதை (சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால், அதற்கும் அவர்கள் முந்தி இருப்பார்கள். இஷாவிலும் சுப்ஹுத் தொழுகையிலும் உள்ளதை (அதன் சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தாவது அந்த இரண்டுக்கும் அவர்கள் வருவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).