🔗

முஅத்தா மாலிக்: 175

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِذَا ثُوِّبَ بِالصَّلَاةِ فَلَا تَأْتُوهَا وَأَنْتُمْ تَسْعَوْنَ، وَأْتُوهَا، وَعَلَيْكُمُ السَّكِينَةُ. فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا. فَإِنَّ أَحَدَكُمْ فِي صَلَاةٍ مَا كَانَ يَعْمِدُ إِلَى الصَّلَاةِ»


175. தொழுகைக்கு இகாமத் கூறப்பட்டால், நீங்கள் விரைந்தவர்களாக அதற்கு வராதீர்கள். நீங்கள் அமைதியை கடைபிடித்தவர்களாக அதற்கு வாருங்கள். நீங்கள் (இமாமிடம்) பெற்றுக் கொண்டதை நீங்கள் தொழுங்கள். உங்களுக்கு தவறி விட்டதை நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். தொழுகைக்கு உங்களில் ஒருவர் முயற்சிக்கும் காலமெல்லாம் அவர் தொழுகையில் உள்ளவர் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்.