«إِنَّ بِلَالًا يُنَادِي بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ»
பாடம் 43
பாங்கின் மூலம் ஸஹர் நேர அளவு
194. பிலால்(ரலி) அவர்கள் இரவில் பாங்கு கூறுவார். (அப்போதிருந்து) இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்கள் பாங்கும் கூறும் வரை நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரி, முஸ்லிம், அஹ்மதிலும் இடம் பெற்றுள்ளது).