🔗

முஅத்தா மாலிக்: 204

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ دَخَلَ مَعَ الإِمَامِ، فَنَسِيَ تَكْبِيرَةَ الاِفْتِتَاحِ، وَتَكْبِيرَةَ الرُّكُوعِ، حَتَّى صَلَّى رَكْعَةً، ثُمَّ ذَكَرَ أَنَّهُ لَمْ يَكُنْ كَبَّرَ تَكْبِيرَةَ الاِفْتِتَاحِ، وَلاَ عِنْدَ الرُّكُوعِ، وَكَبَّرَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ؟ قَالَ: يَبْتَدِئُ صَلاَتَهُ أَحَبُّ إِلَيَّ، وَلَوْ سَهَا مَعَ الإِمَامِ عَن تَكْبِيرَةِ الاِفْتِتَاحِ، وَكَبَّرَ فِي الرُّكُوعِ الأَوَّلِ، رَأَيْتُ ذَلِكَ مُجْزِيًا عَنهُ، إِذَا نَوَى بِهَا تَكْبِيرَةَ الاِفْتِتَاحِ.


204. (தொழுகையில்) இமாமுடன் ஒருவர் சேர்கிறார். ஆரம்பத் தக்பீரையும், ருகூஉ வின் தக்பீரையும் மறந்து, ஒரு ரக்அத்தை தொழுதும் முடிக்கிறார். பின்பு தான் தக்பீர் கூறாததை நினைவு கூர்கிறார். இரண்டாவது ரக்அத்திலும் தக்பீர் கூறிக் கொள்ளலாமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. தன் தொழுகையை அவர்மீண்டும் ஆரம்பிப்பதே எனக்கு மிக விருப்பமானதாகும். மேலும் ஆரம்ப தக்பீரை இமாமுடன் சேர்ந்தவர் மறந்து, முதல் ருகூஉ வின் தக்பீர் கூறினால், ஆரம்ப தக்பீருக்கும் சேர்த்து அவர் (நிய்யத்) எண்ணி இருந்தால் அதுவே அவருக்குப் போதுமாகும் என்று பதில் கூறினார்கள்.