سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «قَرَأَ بِالطُّورِ فِي الْمَغْرِبِ»
பாடம் 46
மஹ்ரிப், இஷாத் தொழுகையில் ஓத வேண்டியவை
207. மஹ்ரிபுத் தொழுகையில் அத்தூர் என்ற (52 வது) அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதிட நான் கேட்டுள்ளேன் என ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).