أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَى النَّاسِ وَهُمْ يُصَلُّونَ. وَقَدْ عَلَتْ أَصْوَاتُهُمْ بِالْقِرَاءَةِ، فَقَالَ: «إِنَّ الْمُصَلِّيَ يُنَاجِي رَبَّهُ، فَلْيَنْظُرْ بِمَا يُنَاجِيهِ بِهِ، وَلَا يَجْهَرْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ بِالْقُرْآنِ»
213. மக்கள் தொழுதுக் கொண்டிருக்கும் போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள் அதிகம் சத்தமிட்டு ஓதிக் கொண்டிருந்தார்கள். (தொழுகை முடிந்தபிறகு) நபி (ஸல்) அவர்கள், “தொழுது கொண்டிருப்பவர், தன் இறைவனிடம் உரையாடுகிறார். எனவே எதன் மூலம் அவனிடம் உரையாட வேண்டும் என்பது பற்றி அவர் சிந்திக்கட்டும்! உங்களில் சிலர், சிலருக்கு இடையூறாக சத்தமிட்டு குர்ஆனை ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஃபர்வா பின் அம்ர் அல்பயாளீ (ரலி)