«إِذَا أَمَّنَ الْإِمَامُ فَأَمِّنُوا، فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»،
قَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «آمِينَ»
பாடம் 51
இமாமுக்கு பின்னே ஆமீன் கூறுதல்
231. இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஒருவரது ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு சாரியாக அமைந்து விட்டால் அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி(ஸல்) அவர்களும் ஆமீன் கூறுவார்கள் என (இதன் அறிவிப்பாளாரில் ஒருவரான) இப்னு ஷிஹாப் கூறுகிறார்.
இது புகாரி, முஸ்னத் அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜாவில் இடம் பெற்றுள்ளது. இப்னு ஷிஹாமின் வார்த்தை இல்லாமல் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது).